சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
51   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 76 )  

கொங்கைப் பணை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
     கொண்டற் குழலிற் ...... கொடிதான
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
     கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
     சந்திப் பவரைச் ...... சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
     சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
     கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
     றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
     சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
     செந்திற் குமரப் ...... பெருமாளே.
Easy Version:
கொங்கைப் பணையில் செம் பொன் செறிவில்
கொண்டல் குழலில் கொடிதான கொன் தைக் கணை ஒப்ப
அந்தக் கயலில்
கொஞ்சுக் கிளி உற்று உறவான சங்கத் தொனியில் சென்று
இல் கடையில் சந்திப்பவரைச் சருவாதே
சந்தப் படி உற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து
அருள்வாயே
அங்கு அப் படை விட்டு அன்றைப் படுகைக்கு அந்திக்
கடலில் கடிது ஓடா
அந்தப் பொழிலில் சந்துத் தலை உற்று அஞ்சப் பொருது
உற்று ஒழியாதே
செம் கைக் கதிர் உற்று ஒன்றி அக் கடலில் சென்று உற்றவர்
தற் பொருள் ஆனாய்
சிந்தைக் கனிவைத் தந்து அப் பொழிலில் செந்தில் குமரப்
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கொங்கைப் பணையில் செம் பொன் செறிவில் ... பருமையான
மார்பிலும், செம்பொன்னாலான அணிகலன்களிலும்,
கொண்டல் குழலில் கொடிதான கொன் தைக் கணை ஒப்ப
அந்தக் கயலில்
... மேகம் போன்ற கரிய கூந்தலிலும், கொடிய
வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன்
போன்ற கண்களிலும்,
கொஞ்சுக் கிளி உற்று உறவான சங்கத் தொனியில் சென்று
இல் கடையில் சந்திப்பவரைச் சருவாதே
... கொஞ்சுகின்ற கிளி
போன்ற பேச்சுக்கு உறவான சங்கு போன்ற கண்டத்தின் குரலிலும்
ஈர்க்ப்பட்டுச் சென்று, வீட்டின் வெளிப்புறத்தில் தம்மிடம்
வருவோரைச் சந்திப்பவர்களாகிய விலைமாதர்களுடன் கொஞ்சிக்
குலவாமல்,
சந்தப் படி உற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து
அருள்வாயே
... பேரின்ப சுக நிலையை நான் அடைய, எனது
தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக.
அங்கு அப் படை விட்டு அன்றைப் படுகைக்கு அந்திக்
கடலில் கடிது ஓடா
... அங்கு தனது சேனையை விட்டு நீங்கி,
அப்பொழுதே நீர் நிலையாகிய (செந்திலுக்கும் சூரனுடைய
தலைநகரான மகேந்திரபுரத்துக்கும் இடையே) சந்தியாக உள்ள
கடலை விரைவாகத் தாண்டி,
அந்தப் பொழிலில் சந்துத் தலை உற்று அஞ்சப் பொருது
உற்று ஒழியாதே
... அந்தப் பூமியாகிய மகேந்திரபுரத்தில்
(முருகனின்) தூதாகச் சென்று, அசுரர்கள் பயப்படும்படி போர்
செய்து, அவர்களுக்கு அஞ்சி நீங்காமல்,
செம் கைக் கதிர் உற்று ஒன்றி அக் கடலில் சென்று உற்றவர்
தற் பொருள் ஆனாய்
... சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப்
போலப் பொருந்தி, அக் கடல் கடந்து போய் வெற்றியுடன்
வந்தவரான வீரபாகு தேவரின் ஆவிப் பொருள் ஆனவனே,
சிந்தைக் கனிவைத் தந்து அப் பொழிலில் செந்தில் குமரப்
பெருமாளே.
... சிந்தையின் அன்பு வைத்து, அழகிய பொழில்
சூழ்ந்த திருச்செந்தூரில் தங்கும் குமரப்
பெருமாளே.

Similar songs:

24 - அம்பொத்த விழி (திருச்செந்தூர்)

தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா

51 - கொங்கைப் பணை (திருச்செந்தூர்)

தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song